செய்திகள்
கைது

கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2021-09-04 17:37 IST   |   Update On 2021-09-04 17:37:00 IST
கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தேவசமுத்திரம் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாரதியார் நகர் கோவிந்தராஜ் (வயது 38), மணிகண்டன் (30), அம்பேத்கர் நகர் கரிமுல்லா (22), லட்சுமணன் (31), வடிவேல் (42), ராஜசேகர் (45) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News