செய்திகள்
கைது

வண்டலூரில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

Published On 2021-09-04 16:14 IST   |   Update On 2021-09-04 16:14:00 IST
வண்டலூரில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வெளிவட்ட சாலையில் நேற்றுமுன்தினம் மாலை ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை வழி மறித்து போலீசார் விசாரித்த போது, அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த சாக்குப் பையை சோதனை செய்தபோது அதில் 48 மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியை சேர்ந்த விஷால் (வயது 21), என்பது தெரியவந்தது. இதனையடுத்து வாலிபர் விஷாலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News