செய்திகள்
காரியாபட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் வினிதா (வயது 25).
இவரும், அதே பகுதியைச்சேர்ந்த முருகன் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடியினர் திருமணம் செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு திருச்சுழி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு காதல் ஜோடியினர் காரில் புறப்பட்டனர். திருச்சுழி-காரியாபட்டி சாலையில் புலிக்குறிச்சி என்ற இடம் அருகே கார் வந்தபோது வேகமாக வந்த மற்றொரு கார் வழிமறித்தது.
அதில் இருந்து திபு...திபு...வென இறங்கிய கும்பல் முருகனை இழுத்து கீழே தள்ளி தாக்கியது. பின்னர் வினிதாவை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இதுகுறித்து முருகன் போலீசில் புகார் செய்தார். அதில், வினோத்குமார், முத்து இருளாயி உள்பட 9 பேர் வினிதாவை கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் வினிதா (வயது 25).
இவரும், அதே பகுதியைச்சேர்ந்த முருகன் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடியினர் திருமணம் செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு திருச்சுழி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு காதல் ஜோடியினர் காரில் புறப்பட்டனர். திருச்சுழி-காரியாபட்டி சாலையில் புலிக்குறிச்சி என்ற இடம் அருகே கார் வந்தபோது வேகமாக வந்த மற்றொரு கார் வழிமறித்தது.
அதில் இருந்து திபு...திபு...வென இறங்கிய கும்பல் முருகனை இழுத்து கீழே தள்ளி தாக்கியது. பின்னர் வினிதாவை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இதுகுறித்து முருகன் போலீசில் புகார் செய்தார். அதில், வினோத்குமார், முத்து இருளாயி உள்பட 9 பேர் வினிதாவை கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.