செய்திகள்
பேரிகை அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
பேரிகை அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
பேரிகை அருகே முகுலப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 47), விவசாயி. சம்பவத்தன்று இவர், அந்த பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்ள டிராக்டர் ஓட்டிச்சென்றார். வழியில், ஒரு பள்ளத்தில் டிராக்டர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இதில் நாராயணப்பா டிராக்டருக்கு அடியில் மாட்டிக்கொண்டும், அதில் இணைக்கப்பட்டிருந்த இரும்புக்கலப்பை அவரது மார்பு பகுதியில் குத்தியதாலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.