செய்திகள்
ரேஷன் அரிசி பதுக்கிய 2 பேர் கைது
வாகனம் நிறுத்தப்பட்டிருந்த வீட்டில் மொத்தம் 250 கிலோ ரேஷன் அரிசி, 80 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது.
விருதுநகர்:
அவரை போலீசார் பின்தொடர்ந்த போது அவர் அங்குள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலைக்கு எதிரே உள்ள தெருவில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார் அவரது வாகனத்தில் மூன்று பைகளில் 75 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. மேலும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த வீட்டில் மொத்தம் 250 கிலோ ரேஷன் அரிசி, 80 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது. அவற்றை இருசக்கர வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்த விசாரித்தனர்.
விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திருத்தங்கல்லைச் சேர்ந்த வெற்றிவேல் என தெரியவந்தது. போலீசார் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று சிவகாசி சரஸ்வதி நகரில் நேற்றுமுன்தினம் வருவாய்த்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 950 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த திருத்தங்கல்லை சேர்ந்த ராமர் என்பவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.