செய்திகள்
கைது

ஜெயங்கொண்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புகைக்கும் பழக்கம்- வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2021-08-31 18:43 IST   |   Update On 2021-08-31 18:43:00 IST
பஸ் நிலையம் அருகே 2 பேர் ஏரிக்கரையில் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்த வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல்கள் வந்தன.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் நிலையம் அருகே 2 பேர் ஏரிக்கரையில் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு கஞ்சாவை புகைத்துக் கொண்டிருந்த 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் கீழத் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் வல்லரசு (22) மற்றும் கீழக்குடியிருப்பு அடிப்பள்ளத் தெருவைச் சேர்ந்த இதயத்துல்லா மகன் உவைஸ் அகமத் (18) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 20 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News