செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி போலீசார் சின்ன பெத்தலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கே.என்.தொட்டியை சேர்ந்த ரோஜா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.