செய்திகள்
கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலி
கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கருணாசாகர் (வயது 24).
இந்த நிலையில் நேற்று இரவு கருணாசாகர், தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது இன்று அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கருணாசாகர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து ஆடு கோடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 7 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருணாசாகருடன் பயணம் செய்த அவரது நண்பர்கள் 6 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் கருணாசாகர் அதிவேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் காரில் ஏர் பேக் வேலை செய்யவில்லை. இதனால் விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
காரில் சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கருணாசாகர் (வயது 24).
இந்த நிலையில் நேற்று இரவு கருணாசாகர், தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது இன்று அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கருணாசாகர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து ஆடு கோடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 7 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருணாசாகருடன் பயணம் செய்த அவரது நண்பர்கள் 6 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் கருணாசாகர் அதிவேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் காரில் ஏர் பேக் வேலை செய்யவில்லை. இதனால் விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
காரில் சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.