செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்து லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜா(வயது 52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.