செய்திகள்
கோப்புபடம்

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-08-25 11:39 GMT   |   Update On 2021-08-25 11:39 GMT
காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெரிய புளியம்பட்டியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி சத்யா (வயது 27). கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த சத்யா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். 

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சத்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News