செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் ஊர்வலத்தின் அவசியம், இந்து சமுதாய ஒற்றுமை பற்றி விரிவாக பேசினார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பத்து ஏழை மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார், ஊர்வலத்தின் அவசியம், இந்து சமுதாய ஒற்றுமை பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து, கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக, இந்த ஆண்டு, காரைக்காலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தில் கரைப்பது, விழாக்குழு பொறுப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவசுப்பிர மணியன், செந்தில்குமார், ராமகலிய மூர்த்தி, நெல்லை செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பத்து ஏழை மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார், ஊர்வலத்தின் அவசியம், இந்து சமுதாய ஒற்றுமை பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து, கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக, இந்த ஆண்டு, காரைக்காலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தில் கரைப்பது, விழாக்குழு பொறுப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவசுப்பிர மணியன், செந்தில்குமார், ராமகலிய மூர்த்தி, நெல்லை செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.