செய்திகள்
ராயக்கோட்டை அருகே மொபட்-மீது லாரி மோதி விவசாயி பலி
ராயக்கோட்டை அருகே மொபட்-மீது லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). விவசாயி. இவர் நேற்று மொபட்டில் ராயக்கோட்டைக்கு வந்து மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். குட்டூர் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.