செய்திகள்
தற்கொலை

தளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-08-21 18:08 IST   |   Update On 2021-08-21 18:08:00 IST
தளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தளி அடுத்த ஜனபெண்டா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று கிருஷ்ணப்பா தனது விவசாய நிலத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News