செய்திகள்
மரணம்

வில்லியனூர் அருகே பெயிண்டர் மயங்கி விழுந்து பலி

Published On 2021-08-20 16:00 IST   |   Update On 2021-08-20 16:00:00 IST
வில்லியனூர் அருகே பெயிண்டர் மயங்கி விழுந்து இறந்து போனார். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனி பெரியார் வீதியில் வசித்து வந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 35). பெயிண்டர். இவரது மனைவி பூவரசி இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் தட்சணாமூர்த்திக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அதுபோல் நேற்று முன்தினம் காலை தட்சணாமூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த தட்சணாமூர்த்தி நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி பூவரசி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தட்சணாமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தட்சணாமூர்த்தி அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி பூவரசி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News