செய்திகள்
ரங்கசாமி

முகரம் பண்டிகை- ரங்கசாமி வாழ்த்து

Published On 2021-08-20 08:18 IST   |   Update On 2021-08-20 08:18:00 IST
முகரம் என்றால் மன்னித்தல் என்பது பொருளாகும். முகரம் மாதத்தின் 10-ம் நாள் தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:

முகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

முகரம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த முகரம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகரம் என்றால் மன்னித்தல் என்பது பொருளாகும். எனவே இதை புனித மாதமாக கொண்டாடுகின்றனர். முகரம் மாதத்தின் 10-ம் நாள் தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மன்னித்தல் மற்றும் தியாகம் ஆகிய 2 உயர்ந்த பண்புகளை அடிப்படையாக கொண்ட முகரம் பண்டிகை நன்னாளில் 2 பண்புகளை நம் வாழ்வின் கொள்கைகளாக கொள்ள உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News