செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் வந்தது

Published On 2021-08-17 08:01 IST   |   Update On 2021-08-17 08:01:00 IST
புதுவையில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பாதிப்பு 50-க்கும் குறைவாக இருந்தது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 49 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 86 பேர் குணமடைந்தனர். தற்போது 192 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 700 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.80 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 484 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை 7 லட்சத்து 64 ஆயிரத்து 138 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.

புதுவையில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பாதிப்பு 50-க்கும் குறைவாக இருந்தது. தொடர் விடுமுறை காரணமாக பரிசோதனை எண்ணிக்கை 3 ஆயிரமாக குறைந்ததால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை 5 ஆயிரத்துக்கும் மேல் தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News