செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டையில் மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2021-08-16 21:45 IST   |   Update On 2021-08-16 21:45:00 IST
தேன்கனிக்கோட்டையில் மது விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் மனைவி கவுரி (வயது 45). இவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதேபோல் அஞ்செட்டியை அடுத்த பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக காந்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News