செய்திகள்
கந்திகுப்பம் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலி
கந்திகுப்பம் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 27). சிவில் என்ஜினீயர். இவர் ஓசூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அந்த கார் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் அருகே ஒரப்பம் பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.