செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 116 பேர் பாதிப்பு

Published On 2021-08-15 16:42 IST   |   Update On 2021-08-15 16:42:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2414 பேர் உயிரிழந்துள்ளனர். 1193 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 608 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 1 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2414 பேர் உயிரிழந்துள்ளனர். 1193 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 248-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1215-ஆக உயர்ந்துள்ளது. 404 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News