செய்திகள்
அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
கொரோனா இல்லாத மாநிலமாக புதுவையை நிலைநிறுத்த மக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும் என சுதந்திர தின உரையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையில் நடந்த நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
எனது அன்பிற்கும், மரியாதைக்குரிய புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தையும், சுதந்திர தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நாளில் விடுதலைக்காக போராடி இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். புதுவை மாநிலத்தில் மீண்டும் நேர்மையான வெளிப்படையான மக்களாட்சி மலர்ந்திட அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து 4-வது முறையாக எனது தலைமையில் ஆட்சி பொறுப்பேற்க செய்துள்ளீர்கள்.
எனது அரசு மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆழத்தை நன்கறிவேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் அளித்த வாய்ப்பை தொடர்ந்து சேவை செய்ய பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நம் மாநிலம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது என்பதை உணர்ந்து விவசாயிகளின் சவால்களுக்கு தீர்வு காணவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், சமூக பொருளாதார நிலையை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் நானோ யூரியாவை கடந்த ஜூலை 7-ந் தேதி அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நெல், கரும்பு, காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதம். இதனால் அதிக மகசூல் ஈட்ட முடியும் என நம்புகிறேன். மக்கள் காய்கறி தோட்டம் அமைக்க ரூ.3 ஆயிரம் மதிப்பிலான விதை, தோட்டக்கலை உபகரணங்கள் அடங்கிய பைகள் 75 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்தினாளிகள், மீனவ முதியோருக்கு ரூ.500 உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் புதிய பயனாளிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுவை யூனியன் பிரசேத்தை மத்திய நிதிக்குழுவிலோ, யூனியன் பிரதேச நிதிக்குழுவிலோ சேர்க்க உரிய வழிமுறைகளை மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கி வரும் 60:40 விகிதாச்சாரத்தை மாற்றி 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல 90:10 என்ற விகிதாச்சாரத்தை வழங்க வேண்டும் என நிதி அயோக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 7.60 லட்சம் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளது. அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் விகிதமும், இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை 1.15 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 88 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய வீடுகளுக்கே சென்று, பதிவு செய்யும் நடமாடும் வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய அறுவை சிசிச்சை மீண்டும் மருத்துவமனையில் தொடர நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அரசு எந்திரம் வேகமாக செயல்பட வேண்டும்.
எனவே அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் 136 அங்கன்வாடி ஊழியர்களும், 143 உதவியாளர்களும் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளனர். ரோடியர் மில்லை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்கவும், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நகரை கண்காணிக்கும் வகையில் ரூ.60 கோடியில் கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. கல்வே காலேஜ் ரூ.4.80 கோடி, வ.உ.சி., பள்ளி ரூ.2.81 கோடியில் புனரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பழைய சிறை வளாகத்திலும், பழைய சாராய வடி ஆலை இடத்திலும் கட்டப்படும்.
காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும். கொரோனா இல்லாத மாநிலமாக புதுவையை நிலைநிறுத்த மக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி தாங்களாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். பொதுமக்களின் முழு ஒத்துழைப்போடு கொரோனாவிலிருந்து பூரணமாக விடுபடுவோம் என திடமாக நம்புகிறேன். எங்கள் அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றை தங்கள் முன் கொண்டுவந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் சிறப்பாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
பொதுமக்களாகிய நீங்கள் அரசுக்கு அளித்து வரும் நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து அளிக்க வேண்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
புதுவை கடற்கரை சாலையில் நடந்த நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
எனது அன்பிற்கும், மரியாதைக்குரிய புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தையும், சுதந்திர தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நாளில் விடுதலைக்காக போராடி இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். புதுவை மாநிலத்தில் மீண்டும் நேர்மையான வெளிப்படையான மக்களாட்சி மலர்ந்திட அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து 4-வது முறையாக எனது தலைமையில் ஆட்சி பொறுப்பேற்க செய்துள்ளீர்கள்.
எனது அரசு மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆழத்தை நன்கறிவேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் அளித்த வாய்ப்பை தொடர்ந்து சேவை செய்ய பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நம் மாநிலம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது என்பதை உணர்ந்து விவசாயிகளின் சவால்களுக்கு தீர்வு காணவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், சமூக பொருளாதார நிலையை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் நானோ யூரியாவை கடந்த ஜூலை 7-ந் தேதி அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நெல், கரும்பு, காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதம். இதனால் அதிக மகசூல் ஈட்ட முடியும் என நம்புகிறேன். மக்கள் காய்கறி தோட்டம் அமைக்க ரூ.3 ஆயிரம் மதிப்பிலான விதை, தோட்டக்கலை உபகரணங்கள் அடங்கிய பைகள் 75 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்தினாளிகள், மீனவ முதியோருக்கு ரூ.500 உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் புதிய பயனாளிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுவை யூனியன் பிரசேத்தை மத்திய நிதிக்குழுவிலோ, யூனியன் பிரதேச நிதிக்குழுவிலோ சேர்க்க உரிய வழிமுறைகளை மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கி வரும் 60:40 விகிதாச்சாரத்தை மாற்றி 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல 90:10 என்ற விகிதாச்சாரத்தை வழங்க வேண்டும் என நிதி அயோக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் நிதியுதவியும் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். சாலை மற்றும் சேவை வரியை இலக்கு அடிப்படையிலான வரி விதிப்பு கொள்கையால் புதுவை யூனியன் பிரதேசம் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. ஜூலை 2022-க்கு பிறகு இந்த வருவாய் இழப்பானது ரூ.140 கோடியாக இருக்கும். எனவே மத்திய அரசு இழப்பீட்டு காலத்தை 5 ஆண்டுக்கு மேல் நீட்டிக்க வேண்டும். அல்லது 1.7.2022 முதல் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடு செய்ய கூடுதல் மத்திய நிதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய வீடுகளுக்கே சென்று, பதிவு செய்யும் நடமாடும் வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய அறுவை சிசிச்சை மீண்டும் மருத்துவமனையில் தொடர நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அரசு எந்திரம் வேகமாக செயல்பட வேண்டும்.
எனவே அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் 136 அங்கன்வாடி ஊழியர்களும், 143 உதவியாளர்களும் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளனர். ரோடியர் மில்லை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்கவும், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நகரை கண்காணிக்கும் வகையில் ரூ.60 கோடியில் கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. கல்வே காலேஜ் ரூ.4.80 கோடி, வ.உ.சி., பள்ளி ரூ.2.81 கோடியில் புனரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பழைய சிறை வளாகத்திலும், பழைய சாராய வடி ஆலை இடத்திலும் கட்டப்படும்.
காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும். கொரோனா இல்லாத மாநிலமாக புதுவையை நிலைநிறுத்த மக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி தாங்களாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். பொதுமக்களின் முழு ஒத்துழைப்போடு கொரோனாவிலிருந்து பூரணமாக விடுபடுவோம் என திடமாக நம்புகிறேன். எங்கள் அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றை தங்கள் முன் கொண்டுவந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் சிறப்பாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
பொதுமக்களாகிய நீங்கள் அரசுக்கு அளித்து வரும் நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து அளிக்க வேண்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்... போதுமான விவாதங்கள் இல்லாமல் பாராளுமன்றத்தில் புதிய சட்டங்கள் -தலைமை நீதிபதி வருத்தம்