செய்திகள்
நீலகிரி கலெக்டர்

விருது மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையை தொடர ஊக்கமளிக்கும்- நீலகிரி கலெக்டர்

Published On 2021-08-14 14:26 IST   |   Update On 2021-08-14 14:26:00 IST
ஊட்டி நகராட்சி தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு வழங்கப்படும் விருது மூலம் திறம்பட செயல்பட உறுதுணையாக இருக்கும்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சுமார் 13 ஆயிரம் பேர் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு தமிழக அரசு விருது வழங்க உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கு மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேல் 5 ஆயிரம் பேர் உள்ளனர்.

அவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாது. இதனால் வீடுகளுக்கு நேரடியாக சென்று செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு எனக்கு விருது அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையை தொடர ஊக்கமளிக்கும்.

மேலும் ஊட்டி நகராட்சி தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு வழங்கப்படும் விருது மூலம் திறம்பட செயல்பட உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News