செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது

Published On 2021-08-12 02:45 GMT   |   Update On 2021-08-12 02:45 GMT
வருகிற 26-ந்தேதி சட்டசபையை கூட்டுவதற்கு முடிவு செய்து அதற்கான கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றது. புதிய அரசு அமைந்ததும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்தன.

முதல்-அமைச்சர் ரங்கசாமி ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் பட்ஜெட்டை தயார் செய்தார். அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் விரைவில் பட்ஜெட்டுக்கு அனுமதி கிடைத்து சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் பட்ஜெட்டுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

முதல்-அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் வருகிற 20-ந் தேதி அல்லது அதற்குபின் முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது அங்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் புதுவை பட்ஜெட்டுக்கும் அனுமதி பெற உள்ளார்.



இதையொட்டி புதுவை சட்டசபையை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற 26-ந்தேதி சட்டசபையை கூட்டுவதற்கு முடிவு செய்து அதற்கான கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் இது என்பதால் அன்றைய தினம் கவர்னர் உரை இடம் பெறும். அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுவார். அடுத்தநாள் 27-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Tags:    

Similar News