செய்திகள்
புதுவையில் மேலும் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுவையில் கொரோனா உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.82 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.
மாகியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. இதுவரை இந்த பிராந்தியத்தில் 4 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 194 பேர், வீடுகளில் 657 பேர் என 851 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 84 பேர் குணமடைந்தனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை. கடந்த 3 நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.82 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 53 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 3 ஆயிரத்து 843 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 43 ஆயிரத்து 238 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.
மாகியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. இதுவரை இந்த பிராந்தியத்தில் 4 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 194 பேர், வீடுகளில் 657 பேர் என 851 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 84 பேர் குணமடைந்தனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை. கடந்த 3 நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.82 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 53 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 3 ஆயிரத்து 843 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 43 ஆயிரத்து 238 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.