செய்திகள்
கைது

குன்னூரில் டாஸ்மாக் கடையில் திருடிய 2 பேர் கைது

Published On 2021-08-09 20:41 IST   |   Update On 2021-08-09 20:41:00 IST
குன்னூரில் டாஸ்மாக் கடையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:

குன்னூர் மவுண்ட் ரோடு சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் டாஸ்மாக் கடை மற்றும் கீழ் தளத்தில் பார் உள்ளது. தற்போது பார் மூடப்பட்டு உள்ளதால், டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கீழ்தளத்தில் இருந்து மேல்தளத்தின் மரத்துண்டுகளால் ஆன தரைத்தளத்தை துளையிட்டு மர்ம ஆசாமிகள் மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், வெலிங்டன் ஸ்டாப் காலேஜ் பகுதியை சேர்ந்த வின்சென்ட் (வயது 43) மற்றும் எஸ்.வி.கே. தெருவை சேர்ந்த சுரேஷ் (35) ஆகியோர் டாஸ்மாக் கடையில் திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News