செய்திகள்
ஓசூரில் பெண்ணிடம் நகைகள் திருட்டு
ஓசூரில் பெண்ணிடம் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள நல்லப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா (வயது 46). சம்பவத்தன்று இவர் பெங்களூருவில் இருந்து ஊருக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே பஸ் வந்த போது, தனது கைப்பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பரிமளா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.