செய்திகள்
புதுச்சேரியில் 88 பேருக்கு தொற்று பாதிப்பு- கொரோனாவுக்கு பெண் பலி
புதுவையில் தொற்று பாதிப்பு 1.51 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.80 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 836 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 88 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 103 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 179 பேர், வீடுகளில் 693 பேர் என 872 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த அரியாங்குப்பம் திரவுபதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த 58 வயது பெண் பலியானார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,799 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு 1.51 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.80 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 20 பேரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 502 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதுவரை 7 லட்சத்து 27 ஆயிரத்து 307 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 836 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 88 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 103 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 179 பேர், வீடுகளில் 693 பேர் என 872 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த அரியாங்குப்பம் திரவுபதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த 58 வயது பெண் பலியானார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,799 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு 1.51 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.80 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 20 பேரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 502 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதுவரை 7 லட்சத்து 27 ஆயிரத்து 307 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.