செய்திகள்
விபத்து

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் வாலிபர் பலி- நண்பர் படுகாயம்

Published On 2021-08-06 10:28 GMT   |   Update On 2021-08-06 10:28 GMT
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நண்பர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கார்த்திக் (வயது 17) .கூலி தொழிலாளி .

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கார்த்திக், அவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (18) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் காட்டு நாயனபள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த இரும்பு கம்பிகள் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேஷ் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் காயமடைந்த ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News