செய்திகள்
தற்கொலை

போச்சம்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-08-06 14:50 IST   |   Update On 2021-08-06 14:50:00 IST
போச்சம்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 48), கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பழனி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News