செய்திகள்
பேடரப்பள்ளி அருகே விபத்தில் டிரைவர் பலி
பேடரப்பள்ளி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் பேடரப்பள்ளி அருகே உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவன் (வயது 32). வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் குருபரப்பள்ளி அருகே குந்தப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சீவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.