செய்திகள்
கூடலூர் அருகே நடமாடும் புலியை பிடிக்கக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்
கூடலூர் அருகே நடமாடும் புலியை கூண்டுவைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
கூடலூர்:
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி தேவன்-1 கிராமத்தில் கடந்த 2 வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் பதுங்கி கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் புலியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி நேற்று முன்தினம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தேவர்சோலை போலீசார் மற்றும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதற்கிடையே புலி கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 3 பேருக்கு கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் இழப்பீட்டு தொகையை வழங்கினர்.
தொடர்ந்து ஊருக்குள் புலி வராதவாறு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். இருப்பினும் கூண்டு வைத்து புலியை பிடித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று 2-வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தோட்டத்தொழிலாளர்களும் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
ஊருக்குள் முகாமிட்டுள்ள புலிக்கு சுமார் 12 வயது இருக்கும். வயதாகிவிட்டதால் இரையை வேட்டையாட முடியாமல் ஊருக்குள் முகாமிட்டு கால்நடைகளை தொடர்ந்து கொன்று வருகிறது. இந்த சமயத்தில் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களையும் தாக்க வாய்ப்புள்ளது. இதனால் மனித உயிர் இழப்புகளும் ஏற்படும் நிலை உள்ளது. எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது போலீசார், வனத்துறையினர் பல கட்டமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. புலியை பிடிக்க கூண்டு வைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி தேவன்-1 கிராமத்தில் கடந்த 2 வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் பதுங்கி கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் புலியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி நேற்று முன்தினம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தேவர்சோலை போலீசார் மற்றும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதற்கிடையே புலி கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 3 பேருக்கு கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் இழப்பீட்டு தொகையை வழங்கினர்.
தொடர்ந்து ஊருக்குள் புலி வராதவாறு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். இருப்பினும் கூண்டு வைத்து புலியை பிடித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று 2-வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தோட்டத்தொழிலாளர்களும் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
ஊருக்குள் முகாமிட்டுள்ள புலிக்கு சுமார் 12 வயது இருக்கும். வயதாகிவிட்டதால் இரையை வேட்டையாட முடியாமல் ஊருக்குள் முகாமிட்டு கால்நடைகளை தொடர்ந்து கொன்று வருகிறது. இந்த சமயத்தில் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களையும் தாக்க வாய்ப்புள்ளது. இதனால் மனித உயிர் இழப்புகளும் ஏற்படும் நிலை உள்ளது. எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது போலீசார், வனத்துறையினர் பல கட்டமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. புலியை பிடிக்க கூண்டு வைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.