செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 43 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 40 ஆயிரத்து 699 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 338 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவிற்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 322 ஆகஉள்ளது.