செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி செல்லாண்டி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). பேக்கரி மாஸ்டர். இவர் கடந்த 27-ந் தேதி இரவு, தனது மோட்டார்சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து சக்திவேல் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.