செய்திகள்
திருட்டு

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-07-31 18:50 IST   |   Update On 2021-07-31 18:50:00 IST
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி செல்லாண்டி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). பேக்கரி மாஸ்டர். இவர் கடந்த 27-ந் தேதி இரவு, தனது மோட்டார்சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து சக்திவேல் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News