செய்திகள்
தற்கொலை

ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2021-07-30 15:08 GMT   |   Update On 2021-07-30 15:08 GMT
ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மெய்யரசு (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தனது பெற்றோரிடம் குடும்ப செலவுக்காக ரூ.5 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மெய்யரசு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News