செய்திகள்
விபத்து பலி

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி

Published On 2021-07-30 10:12 GMT   |   Update On 2021-07-30 10:12 GMT
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கிருஷ்ணகிரி அருகே உள்ள உப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 27-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாலகுறி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பவுன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பவுன்ராஜின் மனைவி குப்பம்மாள் (32) அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News