செய்திகள்
தற்கொலை

முதலியார்பேட்டையில் தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-07-26 11:26 GMT   |   Update On 2021-07-26 11:26 GMT
முதலியார்பேட்டையில் மதுகுடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் சுரேஷ் என்ற சுப்புராயன்(வயது45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனால் சுரேஷ் தனது தாய் ஜோதி மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே மது குடிக்கும் பழக்கமுள்ள சுரேஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் தாயிடம் பணம் வாங்கி மதுகுடித்து வந்தார்.

இந்தநிலையில் அதுபோல் நேற்று மது குடிக்க சுரேஷ் தாயிடம் பணம் கேட்டார். ஆனால் ஜோதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தாயிடம் சுரேஷ் தகராறு செய்தார்.

இதையடுத்து ஜோதியும் அவரது மகளும் வீட்டின் ஒரு அறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். இதனால் மனமுடைந்த சுரேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டு வராண்டாவில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News