செய்திகள்
கோப்புபடம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - புதிதாக 30 பேருக்கு தொற்று

Published On 2021-07-24 14:02 GMT   |   Update On 2021-07-24 14:02 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகினர். புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று தொடர்பாக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து895 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 164 ஆக அதிகரித்தது.

கொரோனாவுக்கு மாவட்டத்தில் தற்போது 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் இணை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி, 77 வயது முதியவர், 69 வயது முதியவர் ஆகியோர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News