செய்திகள்
கைது

மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 4 பேர் கைது

Published On 2021-07-24 16:51 IST   |   Update On 2021-07-24 16:51:00 IST
மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், மற்றும் போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர்கள் ராஜேஷ் (வயது31), ஜபருல்லா (35), சபரிசன் (35), வெங்கடேஷ்பாபு (39) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 555 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News