செய்திகள்
தற்கொலை

கருவடிகுப்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-07-23 11:11 GMT   |   Update On 2021-07-23 11:11 GMT
புதுவை கருவடிகுப்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை கருவடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). தொழிலாளி. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 10ஆண்டுகளாக செல்வராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் அவரது மனைவி கல்பனா தனது மகன்கள் மற்றும் மகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ஆனாலும், கணவருக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பி வந்தார்.

இந்த நிலையில் நேற்று கல்பனா கணவர் செல்வராஜுக்கு தனது தங்கை மங்கையர்கரசி மூலம் சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.

அப்போது வீட்டில் செல்வராஜ் மின் ஒயரால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மங்கையர்கரசி உடனடியாக இதுபற்றி தனது சகோதரி கல்பனாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அலறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்பனா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News