செய்திகள்
கறம்பக்குடியில் சிபிஐஎம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கறம்பக்குடியில் சிபிஐஎம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடைமுக்கத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஐஎம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரம்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய துணைத்தலைவர் விமலா ராணி முன்னிலை வகித்தார்.
இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டரை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து நூதன முறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூதன முறை ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் முதியோர்களின் ஓய்வூதியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடைமுக்கத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஐஎம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரம்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய துணைத்தலைவர் விமலா ராணி முன்னிலை வகித்தார்.
இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டரை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து நூதன முறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூதன முறை ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் முதியோர்களின் ஓய்வூதியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.