செய்திகள்
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்
தனியார் அமைப்புகள் உதவிகளோடு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட வறுமையில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தனியார் அமைப்புகள் உதவிகளோடு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், சமூகநலத்துறை உதவி இயக்குனர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு 200 குழந்தைகளுக்கு சத்துமாவு, பேரீச்சம் பழம், தேன், கொண்டைக்கடலை, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன நிர்வாகிகள் ஜேசு ரத்தினம், தனலட்சுமி, சைல்டு லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட வறுமையில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தனியார் அமைப்புகள் உதவிகளோடு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், சமூகநலத்துறை உதவி இயக்குனர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு 200 குழந்தைகளுக்கு சத்துமாவு, பேரீச்சம் பழம், தேன், கொண்டைக்கடலை, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன நிர்வாகிகள் ஜேசு ரத்தினம், தனலட்சுமி, சைல்டு லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.