செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஆவுடையார்கோவிலில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-07-21 21:12 IST   |   Update On 2021-07-21 21:12:00 IST
கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர்.
ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் அரசு மேல் நிலைப்பள்ளியில் கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர். முகாமில் வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் மருத்துவர், சுகாதார ஆய்வாளர் வீரகுமார் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தினார்கள். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், வர்த்தக சங்க தலைவர் பொன் மாணிக்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News