செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-07-15 03:28 GMT   |   Update On 2021-07-15 03:28 GMT
புதுவையில் 246 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,081 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 177 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 121 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது 246 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,081 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 177 பேர் குணமடைந்துள்ளனர்.

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சண்முகாபுரத்தை சேர்ந்த 56 வயது ஆண் பலியானார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,772 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.40 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 6 பேரும், முன்கள பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 146 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இதுவரை 5 லட்சத்து 14 ஆயிரத்து 335 தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News