செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா

Published On 2021-07-10 14:55 IST   |   Update On 2021-07-10 14:55:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 43,977 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,013 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,977 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 499 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பிற்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் 244 பேரும், மையங்களில் 14 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் நேற்று 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநில பட்டியலில் 39 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News