செய்திகள்
கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் கைது

Published On 2021-07-01 12:29 IST   |   Update On 2021-07-01 12:29:00 IST
அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், புல்லலக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் குமார் (20) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் நடந்ததாக தெரியவந்தது.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளதாக சைல்டு லைன் அமைப்பினர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் புஷ்பவல்லி (வயது59) என்பவர் அல்லம்பட்டி மற்றும் புல்லலக்கோட்டை பகுதியில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், புல்லலக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் குமார் (20) என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் நடந்ததாக தெரியவந்தது. அதன்பேரில் மேலும் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமி வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை கடத்தி வந்து சிறுமியை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதன்பேரில் புஷ்பவல்லி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் ரமேஷ்குமார், அவரது பெற்றோர் மொட்டையசாமி (42), தமிழ்செல்வி (39), சிறுமியின் தந்தை ஆகிய 4 பேர் மீதும் குழந்தை திருமணத்தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News