செய்திகள்
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சகோதரி மரணம்
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் 4வது சகோதரி மனோன்மணி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் 4-வது சகோதரி மனோன்மணி (வயது 76). இவர் திண்டிவனம் அருகே உள்ள பேராவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவருக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (சனிக்கிழமை) பேராவூரில் நடக்கிறது. மனோன்மணிக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் 4-வது சகோதரி மனோன்மணி (வயது 76). இவர் திண்டிவனம் அருகே உள்ள பேராவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவருக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (சனிக்கிழமை) பேராவூரில் நடக்கிறது. மனோன்மணிக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.