செய்திகள்
கொரோனா தடுப்பூசி

காரைமேடு, மூவலூர் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-04 22:05 IST   |   Update On 2021-06-04 22:05:00 IST
திருவெண்காடு அருகே காரைமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
திருவெண்காடு:

திருவெண்காடு அருகே காரைமேடு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா பரிசோதனை ஆகியவை சீர்காழி வட்டார சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தடுப்பூசி மற்றும் கண்டறியும் சோதனை இந்த முகாம்கள் மூலம் செய்யப்பட உள்ளது. சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்றால் அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர். முகாமில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதேபோல மயிலாடுதுறை அருகே மூவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் வட்டார மருத்துவ அலுவலகம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குமாரசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியம்மாள், துணைத் தலைவர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமை ராஜகுமார் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News