செய்திகள்
கைது

ஓசூரில் ரெயிலில் மது கடத்தியவர் கைது

Published On 2021-06-02 20:19 IST   |   Update On 2021-06-02 20:19:00 IST
ஓசூரில் ரெயிலில் மது கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சங்கராபுரத்தை சேர்ந்த சாலமன் என்பவரது மகன் ஜாய்ஸ் பிரபாகரன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். ஓசூர் அருகே ரெயில்வே போலீசார் திடீரென சோதனை செய்தபோது ஜாய்ஸ் பிரபாகரன் 12 கர்நாடக மது பாட்டில்கள் மற்றும் 70 மது பாக்கெட்டுகளை (மொத்தம் 21.37 லிட்டர்) கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மது வகைகளையும் பறிமுதல் செய்து, ஜாய்ஸ் பிரபாகரனை கைது செய்தனர்.

Similar News