செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2,900 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-01 19:51 IST   |   Update On 2021-06-01 19:51:00 IST
காவேரிப்பட்டணம் 7 இடங்களிலும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகள் உள்பட 17 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் 2,900 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் 17 இடங்களில் நடத்தப்பட்டது. அதன்படி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 1,065 பேர் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு கெலமங்கலம், பாகலூர், ஜெகதேவி, சாமல்பட்டி, ஊத்தங்கரை என 5 இடங்களிலும், 45 வயது மேற்பட்டவர்களுக்கு தளி, பாகலூர், சூளகிரி, ஜெகதேவி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் 7 இடங்களிலும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகள் உள்பட 17 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் 2,900 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Similar News