செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு

வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

Published On 2021-05-31 16:17 IST   |   Update On 2021-05-31 16:17:00 IST
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
சீர்காழி:

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகின்றது, இதில் இருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா விழிப்புணர்வு குறித்து மக்களிடையே எடுத்துரைக்கும் வண்ணம் ஓவியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. மேலும் சாலைகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்களும் எழுதப்பட்டன, இதனை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் பார்வையிட்டு கடும் வெயிலிலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஓவியம் வரையும் ஓவியர்களை பாராட்டினார்.

Similar News