செய்திகள்
கைது

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2021-05-31 16:06 IST   |   Update On 2021-05-31 16:06:00 IST
கொள்ளிடம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பனங்காட்டான்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 2 டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டு 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மறித்து மணல் ஏற்றி வந்த 2 பேரை பிடித்து டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மணல்மேடு, குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பையன் மகன் சிலம்பரசன் (வயது 27) மற்றும் சீர்காழி வள்ளுவக்குடி கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பிரவின் (21) என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News